Wednesday, December 7, 2011

நான் ரசித்த பாடல் வரிகள்...

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று உன் காதில் ஏதோ சொன்னது...
இதுதான் வாழ்க்கை என்பதா...விதியின் வேட்கை என்பதா...
சதியின் சேர்க்கை என்பதா...சொல் மனமே...

கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை..
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை...
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை..
மழையின் பயணம் எல்லாம் மண்ணை தீண்டும் வரை...
படகின் பயணம் எல்லாம் நதியை தாண்டும் வரை...
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை...

(நேற்று இல்லாத...)

காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது...
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது...
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது...
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் தளிர் உள்ளது...
இரவு தீர்ந்தலுமே இன்னும்  நிலவுள்ளது..
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது...


(நேற்று இல்லாத...)

வாழ்க்கை

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், ஏதோ மடிந்தோம் என்று சமூகத்திற்கு பயனில்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை எதற்கு?

ஒவ்வொரு மனித வாழ்வும் ஒரு சரித்திரம் ஆக வேண்டும்..

சமூகம் அதனால் பயன் பெற வேண்டும்...

நம் வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும்...


அதுதான் வாழ்க்கை...

ஏதோ ஒருவனுக்காவது நம் வாழ்வு ஒரு தூண்டுகோலாய் அமைய வேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழு...

வாழ்க்கை ஒரு பரிசு, அதை விரயமாக்கி விடாதே..

ஒவ்வொரு வாழ்க்கையின் மதிப்பும் யாருக்கும் வாழும் போது தெரிவதில்லை, அதை இழந்த பின்பு தான் தெரிகிறது...

நாமாவது இப்போதே உணர்ந்து இவ்வாழ்வை பொருள் உள்ள ஒன்றாக வாழுவோம்....!